பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு, முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
காஞ்சிபுரம், அக்.25:
காஞ்சிபுரம் மாநகர திமுக அலுவலக புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இது குறித்து மேலும் கூறியது.
பருவமழையால் நெற்பயிர்கள் பெரும்பாலும் சேதமடையவில்லை.25 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நெற்பயிர்கள் சாயந்துள்ளன.255 ஹெக்டேர் அளவிலான நெற்பயிர்களில் 33 சதவிகிதம் ஈரப்பதம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்றார் போல விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். கடந்த ஆட்சிக் காலத்தை விட இந்த ஆட்சிக் காலத்தில் நெல் உற்பத்தி 3 மடங்கு உயர்ந்துள்ளது.தற்போது 9 லட்சம் மெ.டன் உற்பத்தியாகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் நெல்மூட்டைகளை திறந்த வெளியில் வைத்திருந்தார்கள்.தற்போது திறந்த வெளியில் எக்காரணத்தை முன்னிட்டும் நெல்மூட்டைகளை வைக்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி செயல்பட்டு வருகிறோம்.மத்திய ஆய்வுக்குழு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். அவர்களை நேரில் சந்திக்கும் எண்ணம் இல்லை.
கரோனா நோய்தொற்றுக் காலத்தில் திமுக தான் மக்களுக்கு துணையாக இருந்தது.தி.நகர் எம்எல்ஏ அன்பழகன் கரோனா காலத்தில் மக்களுக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார்.கரோனா காலத்தில் மக்களைக் காக்க யாரும் முன்வரவில்லை.
த.வெ.க.தலைவர் விஜய் ஒரு நடிகர்,முன்பு அரங்குகள் அமைத்து நடித்தார். இப்போதும் அதே போன்று நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
100 கோடி,200 கோடி என சம்பளம் வாங்கியவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்.அவர் ஏதோ ஒரு ஆதாயத்துடன் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆

No comments
Thank you for your comments