Breaking News

வாலாஜாபாத்தில் மனைவியுடன் தகராறு - கணவர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம், அக்.25:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் 2 வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டை ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் மணி(42) கட்டிடத் தொழிலாளியாக இருந்து வரும் இவரது முதல் மனைவி ரேவதி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ரேஷ்மா(9) என்ற பெண் குழந்தையும் உள்ளது.


இந்த நிலையில் இவர் வேலூரைச் சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.குழந்தையில்லாமல் இருந்து வந்த இத்தம்பதியரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுவேதா தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியான மணி வாலாஜாபாத்தில் உள்ள அவரது வீட்டில் உள்ள மின்விசிறியால் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி  பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡

  💛 புதிய தகவல் இதோ👆  

 

No comments

Thank you for your comments