கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேனிங் மெஷின் வைத்திருந்த ஒருவர் கைது – நான்கு பேர் தப்பி ஓட்டம்
விருத்தாசலம் :
இந்த தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்ட இணை இயக்குனர் மணிமேகலை தலைமையிலான மருத்துவத்துறை குழு சிறுப்பாக்கம் காவல் துறையினருடன் இணைந்து செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்து ஸ்கேனிங் மெஷின் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், அந்த மெஷின் பயன்படுத்தி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை பார்ப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில், இடைத்தரகராக செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரை சிறுப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தது. வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜா நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments