Breaking News

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலைக்கு காரணமான பள்ளி உரிமையாளரின் மகன் கைது




 விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் மகள் ராதிகா (35) என்பவர், ஆலடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளாக LKG ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.


அந்த பள்ளியின் உரிமையாளர் ஜேசுதாஸ் ராஜா என்பவரின் மகன் பிரின்ஸ் நவீன் (37) என்பவருடன் ராதிகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பள்ளியில் சமையலராக பணியாற்றும் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருடனும் பிரின்ஸ் நவீன் காதல் தொடர்பில் இருந்ததாக தகவல்.

இந்தக் காரணத்தால் ராதிகா மற்றும் பிரின்ஸ் நவீன் இடையே WhatsApp வீடியோ கால் மூலம் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மன உளைச்சலுக்கு ஆளான ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


சம்பவம் குறித்து ராதிகாவின் தந்தை ராஜவேல் அளித்த புகாரின் அடிப்படையில், மங்கலம்பேட்டை காவல் நிலையம் குற்ற எண் 201/2025, U/s 194 BNSS என வழக்கு பதிவு செய்தது.

பின்னர், காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி விசாரணை மேற்கொண்டு, வழக்கை 194 BNSS @ 108 BNS என்ற பிரிவில் மாற்றி, ராதிகா தற்கொலைக்கு காரணமானதாக கூறப்படும் பிரின்ஸ் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  


No comments

Thank you for your comments