Breaking News

களிமண் பொம்மைகள் செய்யும் கலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் - மாவட்ட ஆட்சியர் பெருமிதம்



காஞ்சிபுரம், அக்.28:

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் களிமண் பொம்மைகள் மற்றும் பறை இசைப்போட்டி ஆகியனவற்றில் முதலிடத்தை பிடித்தது என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிகள்,வட்டாரம்,மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும்,பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசு என்ற பட்டங்களும்,முதலமைச்சர் அவர்களால் விருதும்,சான்றிதழும் வழங்கப்படுகிறது. கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாகவும் அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிர்ப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யாசுகுமார்,காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நளினி வரவேற்று பேசினார்.விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசியது..



நிகழாண்டு பசுமையும்,பாரம்பரியமும் என்ற தலைப்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் களிமண் பொம்மைகள் செய்தல், பறை இசை ஆகியனவற்றுக்கு மாநில அளவில் முதலிடமும், நாட்டுப்புற நடனக்குழு,தனி நடிப்பு, பாவணை நடிப்பு ஆகிய கலைகளுக்கு 2 வது இடத்தையும் காஞ்சிபுரம் மாவட்டம் பெற்றிருந்தது.

மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு முதலமைச்சர் விருதும், சான்றிதழும் வழங்கியதோடு கலையரசன்,கலையரசு பட்டங்களையும் பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாணவர்கள் பெருமை சேர்த்தனர்.நிகழாண்டும் காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்று முதலமைச்சரிடம் பரிசுகள் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் பேசினார்.

விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கோமதி,ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments