Breaking News

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம்- காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பேச்சு


காஞ்சிபுரம், அக்.28:

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கே.வி.கலைச்செல்வன் பேசினார்.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் வி.தேவநாராயணன்,ஆர்.கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கே.வி.கலைச்செல்வன் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பணியாளர்களும் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதன் பின்னர் டிஎஸ்பி கே.வி.கலைச்செல்வின் பேசியது.

ஒரு பணியைச் செய்யவோ அல்லது அதை விரைவாகச் செய்யவோ, சட்ட விரோதச் செயல்களை செய்யவோ வழங்கப்படும் பரிசுகளோ அல்லது பணமோ சட்டப்படி குற்றமாகும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.லஞ்சம் பெறுவது தொடர்பாக பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் செய்யலாம். 

புகார் செய்யும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். ஊழல் தடுப்பு வாரம் என்பது சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி அக்.27 முதல் நவ.2 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்த நாட்களை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாகவும் கடைப்பிடித்து வருகிறோம் என்றும் ஊழல் தொடர்பான குற்ற வழக்குகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.நிகழ்வில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

.

No comments

Thank you for your comments