Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆய்வு



காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிசந்திரன் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, பேரிடர் காலங்களில் விரைவான தகவல் பரிமாற்றம், அவசர மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புத் திறனை மேம்படுத்தும் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், மழைக்காலத்தையொட்டி கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்பு சாதனங்கள், கணினி வசதிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் சரிவர செயல்படுகிறதா எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு செய்தார்.


பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக துரித தகவல் பரிமாற்றம் மற்றும் மீட்பு பணிகள் குறித்த சிறப்பு வழிமுறைகளையும் அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments