Breaking News

பழவேரியில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்


காஞ்சிபுரம், அக்.19:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழவேரி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழவேரி ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறையும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து தமிழக அரசின் அறிவுரையின்படி பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பனைவிதைகளை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பனைவிதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.நளினி மற்றும் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments