தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை
இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசியல் கட்சி பிரநிதிகளிடம் முழுமையாக விளக்கினார். இதன்படி, 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒரு மாதம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள 1401 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அவர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும் (BLO Supervisors) நியமிக்கப்பட்டுள்ளனர்.
04.12.2025 -க்குள் வாக்குச்சாவடி மறு வரையறை வகைப்படுத்த வேண்டும். 05.12.2025 முதல் 08.12.2025 வரை கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய வேண்டும். 09.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட வேண்டும். 09.12.2025 முதல் 08.01.2026 வரை கோரிக்கைகளும் மறுப்புரைகளும் பெற வேண்டும்.
09.12.2025 முதல் 30.01.2026 வரை வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைகள், மறுப்புரையாக பெறப்பட்டவைகளை முடிவு செய்தல் வேண்டும். மேற்படி பணிகளை கண்காணிக்க வட்டாட்சியர் நிலையில் எட்டு உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் (AEROs) அவர்களை மேற்பார்வையிட துணை ஆட்சியர் நிலையில் நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்களும் (EROs) உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் விவரம் மாநில தலைமை தேர்தல் அலுவலர் இணையதளமான https://www.elections.tn.gov.in மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இணையதளமான https;//kancheepuram.nic.in -ல் பதிவேற்றம் செய்யப்படும். இந்த பணிகளை மேற்கொள்ளும் போது வாக்காளர் பதிவு அலுவலர்கள் எந்தவொரு தகுதியான வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடுபடக்கூடாது.
தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது. வீடுகளுக்கு 04.11.2025 முதல் 04.12.2025 வரை கணக்கெடுக்க செல்லும் போது வீடு பூட்டப்பட்டு இருந்தால் கணக்கீட்டு படிவத்தினை கணக்கெடுக்க செல்வோர் அந்த வீட்டில் வைத்துவிட்டு வருவார். வாக்காளர் சுய சான்று அளித்து 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் போதுமானது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA) சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறைகளை விளக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்காளர் பதிவு அலுவலரால் பயிற்சி வழங்கப்படும்.
வீடு வீடாக கணக்கெடுப்புக்கு முன், வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி, சிறப்பு தீவிர திருத்தத்தின் அட்டவணை செயல்முறை மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்குவார் என்றும், மேற்படி சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் போது ஒத்துழைப்பு தருமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் 01.01.2002- ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 25.04.2002 / 15.09.2005 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விவரம் | |||
தொகுதி | ஆண் | பெண் | மொத்தம் |
28, ஆலந்தூர் | 220926 | 215961 | 436887 |
29, திருப்பெரும்புதூர் | 124370 | 132159 | 256529 |
36, உத்திரமேரூர் | 94084 | 102678 | 196762 |
37, காஞ்சிபுரம் | 112824 | 119654 | 232478 |
மொத்தம் | 552204 | 570452 | 1122656 |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27.10.2025 வரை வாக்காளர்களின் விவரம் வருமாறு | |||||
தொகுதி | ஆண் | பெண் | மூன்றாம் பாலினம் | மொத்தம் | கடைசி சிறப்பு திருத்தத்தில் சேர்ந்தவர்கள் |
28, ஆலந்தூர் | 196601 | 202667 | 62 | 399330 | 10800 |
29, திருப்பெரும்புதூர் | 198682 | 211281 | 71 | 410034 | 14979 |
36, உத்திரமேரூர் | 131803 | 142672 | 64 | 274539 | 5553 |
37, காஞ்சிபுரம் | 152910 | 164345 | 40 | 317295 | 5471 |
மொத்தம் | 679996 | 720965 | 237 | 1401198 | 36803 |
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா. முருகேசன், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சி.பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.பு.விஜயகுமார், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon

No comments
Thank you for your comments