Breaking News

🌳 களியனூர் ஊராட்சியில் மரம் நடும் விழா – பனை விதைகளும் நடப்பட்டது



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில், களியனூர் ஊராட்சியில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். நிகழ்வின் போது பல்வேறு வகை மரங்களுடன் பனை விதைகளும் நடப்பட்டன.

மரம் நடும் விழா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது.

இதற்காக தன்னார்வலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒத்துழைத்தனர்.

களியனூர் ஊராட்சி மன்ற தலைவர்  வடிவுக்கரசி ஆறுமுகம் ,

“இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 

No comments

Thank you for your comments