காஞ்சிபுரத்தில் ரத்ததானக் கொடையாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
காஞ்சிபுரம், அக்.16:
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazonகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் தேசிய தன்னார்வ ரத்ததான தினம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றதது.மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில்,எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் பேபி, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் சரவணன்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பா.கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கடந்த நிதியாண்டில் 1451 அவசர ரத்ததான தேவைகளுக்கும்,அரசு மருத்துவமனையுடன் இணைந்து 21 ரத்ததானமுகாம்களையும் நடத்தியமைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டக்கிளை நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும்,கேடயமும் ஆட்சியர் வழங்கினார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
இதனையடுத்து அதிக முறை ரத்ததானம் செய்த விப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் அருள்நாதன் உட்பட ரத்ததானம் வழங்கிய 100க்கும் மேற்பட்ட ரத்ததானக் கொடையாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவின் நிறைவாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ரத்ததான கொடையாளர்கள்,அரசு அலுவலர்கள் அனைவரும் அவசரத் தேவைக்கு ரத்ததானம் வழங்குவோம்,ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments