காஞ்சிபுரத்தில் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்காததால் நிரம்பாத ஏரிகள் - விவசாயிகள் குற்றச்சாட்டு
| தொடர்மழை பெய்தும் நிரம்பாத அரும்புலியூர் ஏரி |
காஞ்சிபுரம், அக்.30:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் 381 ஏரிகள் பாரமரிப்பில் இருந்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பெய்து வரும் மழை காரணமாக இதுவரை 77 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியிருக்கின்றன.
மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் ஏரி முழுமையாக நிரம்பி இருக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியை ஒட்டியுள்ள செவிலிமேடு ஏரிக்கு வரத்துக்கால்வாய்கள் அதிகமாக இருந்தும் அதனை சீரமைக்கவில்லை.கீழம்பி செல்லும் புறவழிச்சாலை அருகிலிருந்து வரும் வரத்துக்கால்வாயும்,மேடான பகுதியாக இருப்பதால் செவிலிமேடு ஏரிக்கு தண்ணீர் வர முடியாமலும் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறையினர் பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்காமல் மெத்தனமாக இருந்ததால் பல ஏரிகள் நிரம்பாமல் இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இ.லாரன்ஸ் கூறியது..
இந்த ஆய்வில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள செவிலிமேடு ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் சிறிய குட்டை போல காட்சியளிக்கிறது. நூற்றுக் கணக்கான விவசாயிகள் இந்த ஏரிப்பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.
தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தாலும் பாலாற்றை ஒட்டியுள்ள கிளை ஏரிகள் பலவும் இதுவரை நிரம்பாமல் உள்ளது.
இதற்கு காரணம் கிளை ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலும், சரியாக தூர்வாரப்படாததுமே காரணம் எனவும் இ.லாரன்ஸ் தெரிவித்தார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments