Breaking News

காஞ்சிபுரத்தில் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்காததால் நிரம்பாத ஏரிகள் - விவசாயிகள் குற்றச்சாட்டு

 தொடர்மழை பெய்தும் நிரம்பாத அரும்புலியூர் ஏரி 

காஞ்சிபுரம், அக்.30:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்துக் கால்வாய்களை நீர்வளத்துறையினர் முறையாக சீரமைக்காததால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்தும் பல ஏரிகள் நிரம்பவில்லையென வியாழக்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் 381 ஏரிகள் பாரமரிப்பில் இருந்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பெய்து வரும் மழை காரணமாக இதுவரை 77 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியிருக்கின்றன.

மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் ஏரி முழுமையாக நிரம்பி இருக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியை ஒட்டியுள்ள செவிலிமேடு ஏரிக்கு வரத்துக்கால்வாய்கள் அதிகமாக இருந்தும் அதனை சீரமைக்கவில்லை.கீழம்பி செல்லும் புறவழிச்சாலை அருகிலிருந்து வரும் வரத்துக்கால்வாயும்,மேடான பகுதியாக இருப்பதால் செவிலிமேடு ஏரிக்கு தண்ணீர் வர முடியாமலும் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறையினர் பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்காமல் மெத்தனமாக இருந்ததால் பல ஏரிகள் நிரம்பாமல் இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இ.லாரன்ஸ் கூறியது..

ஏரி மாவட்டம் என்ற பெயருக்குரியது காஞ்சிபுரம் மாவட்டம்.இம்மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளில் 77 சதவிகிதத்துக்கும் மேலாக நீர் நிரம்பியிருப்பதாக அறிந்தோம்.இதனடிப்படையில் சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.வி.சங்கர் தலைமையில் ஒரு குழு ஏரிகள் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தோம்.


இந்த ஆய்வில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள செவிலிமேடு ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் சிறிய குட்டை போல காட்சியளிக்கிறது. நூற்றுக் கணக்கான விவசாயிகள் இந்த ஏரிப்பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.

ஆனால் அருகாமையில் ஓடும் பாலாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் முகத்துவாரம் வெப்பேடு பகுதியில் உள்ளது. இதை திறந்தால் 25 அடி அலகம் கொண்ட கால்வாயின் வழியாக செவிலிமேடு ஏரி நிரம்பி நீர் ஆதாரம் பெருகும். எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தாலும் பாலாற்றை ஒட்டியுள்ள கிளை ஏரிகள் பலவும் இதுவரை நிரம்பாமல் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அசூர்,கொளத்தூர்,மேல்புத்தூர், கீழ்புத்தூர், பழவேரி, அரும்புலியூர் ஆகிய ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. 

இதற்கு காரணம் கிளை ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலும், சரியாக தூர்வாரப்படாததுமே காரணம் எனவும் இ.லாரன்ஸ் தெரிவித்தார்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments