காஞ்சிபுரத்தில் கலைஞர் பவள விழா மாளிகையில் அவசர செயற்குழு கூட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய பயிற்சி பாசறை கூட்டத்தில் எடுத்த முடிவுகள் முறைப்படுத்தும் விதமாக காஞ்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள 1170 வாக்குச்சாவடிகளிலும் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலுக்கு வாக்குச்சாவடி அளவில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கழக நிர்வாகிகளை ஈடுப்படுத்தி குறிப்பிட்ட நாட்களில் முடிப்பது மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களும் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மாலை நேரங்களில் எளிய முறையில் கூட்டம் நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் மாதம் முழுவதும் தெரு முனை பிரச்சார கூட்டம் நடத்தி SIR சிறப்பு திட்டத்தின் நோக்கத்தை பொதுமக்களிடம் எடுத்து செல்வது மற்றும் பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது,இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments