Breaking News

உத்தரமேரூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு


காஞ்சிபுரம், அக்.30:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவானைக்கோயில், அரும்புலியூர், பினாயூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவானைக்கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் புதிய நியாயவிலைக்கடை, அரும்புலியூர் காலணியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.31.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான குழாய்ப் பதிப்பு பணிகள், அரும்புலியூரில் பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் ரூ.5.07 லட்சம் மதிப்பில் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், பழவேரி, 


பினாயூர் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் திட்டப்பணிகள் ஆகியனவற்றை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பினாயூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50லட்சம் மதிப்பில் 360 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளையும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

.

No comments

Thank you for your comments