Breaking News

புளியம்பாக்கம் பாலாற்றங்கரையில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வு


காஞ்சிபுரம், அக்.30:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் புளியம்பாக்கம் கிராமத்தில் பாலாற்றங்கரை பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் புளியம்பாக்கம் கிராமத்தின் பாலாற்றங்கரையில் வனத்துறையும், விதைகள் அமைப்பும் இணைந்து 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வை நடத்தினார்கள்.


மாவட்ட வனச்சரக அலுவலர் ராமு பனை விதைகளை நட்டு நடவுகளை தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் கோமதி, விதைகள் அமைப்பின் அமைப்பாளர் பசுமைசரண், சுற்றுச்சூழல் அலுவலர் வெங்கடேசன், இயற்கை ஆர்வலர் சசிக்குமார் ஆகியோர் தொடர்ந்து பனை விதைகளை நட்டனர். 

இந்நிகழ்வில் புளியம்பாக்கம், பழையசீவரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளி, ஜெயிண்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பனைவிதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

.

No comments

Thank you for your comments