Breaking News

உத்தரமேரூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் - காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு


காஞ்சிபுரம், அக்.15:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தோட்டநாவல்,குண்ணவாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.5.07 லட்சம் மதிப்பில் 300 அடி சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ரூ.2.40லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் 360 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகள் ஆகியனவற்றை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து தோட்டநாவல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.8.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றங்கால் பண்ணையினையும், ரூ.16.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.





No comments

Thank you for your comments