இடிதாக்கி விழுந்து 4 பெண்கள் உயிரிழந்த துயரம் — கடலூரில் பரிதாபம்!
கடலூர்:
அரியநாச்சி பகுதியில் உள்ள மக்காசோளம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது திடீரென இடி விழுந்தது. இதனால் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த நில உரிமையாளர் சிவக்குமார் மனைவி ராஜேஸ்வரி (40), கழுதூர் கிராமத்தை சேர்ந்த கனிதா, பாரிஜாதம், மற்றும் ராஜேஸ்வரி ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
அதே இடத்தில் இருந்த கழுதூர் கிராமத்தை சேர்ந்த தவமணி உயிர்தப்பி தற்காலிக சிகிச்சையில் உள்ளார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
📍சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
“வயலில் வேலை பார்க்கச் சென்ற பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தது மிகுந்த வேதனைக்குரியது. இயற்கை சீற்றத்தால் குடும்பங்கள் சிதைந்துள்ளன,” — கிராம மக்கள் வருத்தம்.
⚡ இடி மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுத்திருந்தாலும், பல இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து பணி செய்து வருவது கவலைக்குரியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு பெண்களின் மரணம் கடலூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


No comments
Thank you for your comments