சொத்துத்தகராறு - தாயை வெட்டிக் கொலை செய்த மகன் உட்பட 3 பேர் கைது
காஞ்சிபுரம், அக்.25:
காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(65)இவருக்கு செல்லப்பன்(45)துரைச்சாமி(35) என இரு மகன்கள் இருந்து வருகின்றனர்.இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வரும் நிலையில் சொத்துக்களை ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் பிரித்துக் கொடுத்தது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இத்தகராறின் போது இருவரையும் விலக்கி விட முயன்ற தாய் தனலட்சுமியை மூத்த மகன் செல்லப்பன், இவரது மனைவி புனிதா(40)பேரன் லோகேஷ்(20)ஆகிய மூவரும் சேர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதுடன் கத்தியாலும்,கட்டையாலும் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
செல்லப்பனின் தம்பி துரைச்சாமி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரும் தகராறில் படுகாயம் அடைந்து 4 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் தாயார் தனலட்சுமி சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை போலீஸôர் வழக்குப்பதிவு செய்து செல்லப்பன்,அவரது மனைவி புனிதா,பேரன் லோகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றதாயை மூத்த மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் காரை கிராமத்தில் பரபரப்பையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆


No comments
Thank you for your comments