Breaking News

தென்னிந்தியா கூட்டமைப்பு திருநங்கைகளின் சார்பாக வீரபாண்டி பேரூராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு !




கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட காட்டு மாரியம்மன் கோவில் அருகில் அம்மன் அவன்யூ பகுதியில் வசித்து வரும் தென்னிந்திய கூட்டமைப்பு திருநங்கைகளின் தென்காசி மாவட்ட தலைவி பன்னீர் செல்வி நாயக் அவர்கள் ஏற்பாட்டில் 7வது முறையாக தமிழகத் திருநங்கைகளின் சார்பாக பேரூராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்கள், டெங்கு கொசு நோய் தடுப்பு பணியாளர்கள், வாட்டர் மேன்கள் உள்ளிட்ட சுமார் 200 நபர்களுக்கு தீபாவளி பரிசாக வேஷ்டி, சேலை, 10 கிலோ அரிசி, இனிப்பு, காரம், மற்றும் ரொக்கப் பணம் 500 உள்ளிட்ட தொகுப்பினை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இதனை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் பன்னீர்செல்வி நாயக் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.

 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455



🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 




No comments

Thank you for your comments