Breaking News

ஸ்ரீ சுரேந்திரநாத் சிவப்பிரகாச சுவாமிகளின் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது



விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானக்கூத்தர் மடாலயத்தில்ஸ்ரீ சுரேந்திரனார் சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், மற்றும் பார்க்கவ குல முன்னேற்ற சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆனந்தபூர்வமாக நடைபெற்றது.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 


விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சுரேந்திரநாத் சிவப்பிரகாச சுவாமிகள் பெயர்சூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து மண்டலம் அபிஷேகம், நிவேதி அபிஷேகம், மற்றும் ஆச்சார்ய அபிஷேகம் ஆகியவை ஞானக்கூத்தர் அருளாலும், வடலூர் வள்ளலார் ஆசீர்வாதத்தாலும் ஆன்மிக நிறைவுடன் நடைபெற்றன.


Jivada Kumkumadi Tailam

🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 


இந்த நிகழ்வில் துறையூர் ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை மேகண்ட சந்தானம்,  திருத்துறையூர் ஆதீனம், ஸ்ரீ குமார் தேவர்மனத்தை ஆதி இனத்தைச் சேர்ந்த ஞானக்கூத்தர் மடாலயம் ஆகியோர் பங்கேற்று விசேஷ பூஜைகளைச் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை பார்க்கவகுல முன்னேற்ற சங்கத் தலைவர் ஜெயராமன்செயலாளர் தண்டபாணி, பொருளாளர் செல்வ சுப்பிரமணியன் ஆகியோர்
நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

இறுதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவுற்றது.


No comments

Thank you for your comments