ஜோஸ் ஆலுக்காஸின் புதிய கிளை திறப்பு...!
இந்தியாவில் நிகரற்ற தரம், புதுமையான வடிவமைப்பு மற்றும் தற்காலத்திற்கு ஏற்ற நவீன ஆபரணங்களுக்காக மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ஜோஸ் ஆலுக்காஸ், கோவை ஒப்பணக்கார வீதியில் புதிய 2வது கிளை துவக்க விழாவில் ஜோஸ் ஆலுக்காஸின் பிராண்டு தூதரும், திரைப்பட நடிகருமான ஆர். மாதவன் பிரமாண்ட ஆபரண ஷோரூமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கணபதி ராஜ்குமார், மேயர். கே. ரங்கநாயகி, துணை மேயர் ஆர். வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரு தளங்களுடன் 8000 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த புதிய ஷோரூம், மிகப்பெரிய ஆபரண விற்பனை யகமாகும்.
இந்த பிரபல பிராண்டின் தங்க, வைர, பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் ஒட்டுமொத்த அணிவரிசையும் இந்த ஷோரூமில் இடம்பெற்றிருக்கிறது. மணப் பெண்ணுக்கான ஆபரணங்கள், விழாக்கால மற்றும் நவீன ஆபரண கலெக்ஷன்கள் என பல்வேறு வகைகளும் இந்த பிராண்டின் தனி முத்திரையான நகை வடிவமைப்பில் ஜொலிக்கிறது.
நடிகர் மாதவன் பேசுகையில், ஜோஸ் ஆலுக்காஸ் உடனான எனது உறவும், பிணைப்பும் எப்போதும் ஆழமானதாகவும், தனித்துவ மானதாகவும் இருந்து வருகிறது.
அவர்களது ப்ரீமியம் ஷோரூம்களுக்குள் நாம் நுழையும் ஒவ்வொரு நேரத்திலும் நகை வடிவமைப்புத் திறனோடு அற்புதமான உணர்வுகளை இந்த பிராண்டு எவ்வளவு அழகாக இணைக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். கோவை மாநகரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய பிரமாண்ட ஷோரூம், அதே உணர்வை கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான அனுபவத்தை உருவாக்க வடிவமைப்புத் திறனும், பாரம்பரிய செழுமையும் இங்கு ஒருங்கிணைந்திருக்கின்றன.மேலும் ‘தங்கம்’ என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பை நான் வெளியிட்டதை பெருமிதம் கொள்கிறேன் தமிழ் மொழியில் ‘தங்கம்’ என்ற சுய வரலாறு நூலின் முதல் பிரதியை பெறுவது பெருமையையும், தாழ்மை உணர்வையும் ஒருங்கிணைத்து தரும் தருணமாக இருக்கிறது.
ஜோஸ் ஆலுக்காஸ் அவர்களின் அசாதாரணமான பயணத்தையும் இந்த பாரம்பரியம் மிக்க பிராண்டை வடிவமைக்க உதவியிருக்கும் மதிப்பீடுகளையும் இந்த புத்தகம் தெளிவாக சித்தரிக்கிறது என தெரிவித்தார்.
செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455



No comments
Thank you for your comments