காஞ்சிபுரத்தில் மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா - முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
காஞ்சிபுரம், அக்.25:
காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் கேடிஎஸ் மணி மாளிகை என இருந்த திமுக மாநகர அலுவலகம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு நுழைவுவாயிலில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது மார்பளவு சிலையுடன் அமைக்கப்பட்டிருந்தது.
புதுப்பிக்கப்பட்ட இக்கட்டிடம் திறப்பு விழா உத்தரமேரூர் எம்எல்வும், கட்சியின் மாவட்ட செயலாளருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
கட்டிட வளாகத்தில் புதியதாக அமைக்கப் பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவச்சிலை,கலைஞர் நூற்றாண்டு அரங்கம்,மாநகர கழக அலுவலகம் ஆகியனவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திறப்பு விழாவிற்கு எம்பி க.செல்வம்,எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர திமுக செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட மாநகர திமுக அலுவலகத்தை பார்வையிட்டு ஏற்பாடுகளை செய்திருந்த மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வனை பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் மாநகர அவைத்தலைவர் கே.ஏ.செங்குட்டுவன்,மாநகர துணைச் செயலாளர்கள் வ.ஜெகன்னாதன், ஏ.எஸ்.முத்துச்செல்வன், பி.நிர்மலா, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் உட்பட கட்சியின் பகுதி செயலாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் மலர்மன்னன் நன்றி கூறினார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆

No comments
Thank you for your comments