காஞ்சிபுரத்தில் 51 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியது-நீர் ஆதாரம் பெருகுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம், அக்.23:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகளும், குளங்களும் நீரம்பி வருகின்றன. மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 381 ஏரிகளில் 51 ஏரிகள் 100 சதவிகிதத்தையும், 50 ஏரிகள் 99 சதவிகிதத்தையும், 154 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியிருக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பழையசீவரம் பகுதி தடுப்பணையும், காஞ்சிபுரத்திலிருந்து வந்ததவாசி செல்லும் சாலையில் வெங்கச்சேரி கிராமப் பகுதியில் செய்யாற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணையிலும் நீர் நிரம்பியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம் தடுப்பணையில் 9471 கன அடியும், செய்யாற்றில் 8796 கன அடியும் உபரியாக நீர் வெளியேறி வருகிறது.பாலாற்றிலும், செய்யாற்றிலும் உள்ள தடுப்பணைகள் வழியாக செல்லும் உபரி நீரை கால்வாய்கள் மூலம் பல்வேறு ஏரிகளை நிரப்புவதற்கான பணிகளையும் நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பணைகள் நிரம்பி உள்ளதாலும், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதாலும் நீர் ஆதாரங்கள் பெருகி வேளாண்மை செழிக்கும் என சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments