Breaking News

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி- ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்


காஞ்சிபுரம், அக்.27:

முடக்குவாதத்தாதல் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையிலிருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் காயத்ரி என்பவர் குருப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காஞ்சிபுரம் ஜெம்நகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசங்கர்}தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் ஜெ.காயத்ரி(32) இவர் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றார்.

இவர் அண்மையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆவணத்தையும் கொண்டு வந்து கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.


இது குறித்து ஜெ.காயத்ரி கூறுகையில் முடக்கு வாதத்தால் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது கையும்,கால்களும் செயலிழந்தன. எழுந்த நடக்க முடியாத நிலையில் எப்போதும் எனது தாயார் தமிழ்ச்செல்வி உதவியுடன் சக்கர நாற்காலியில் தான் பள்ளிக்கு செல்வேன்.

அண்மையில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்து தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகியுள்ளேன். வேலையில் சேர்ந்ததும் உளவியல் பட்டப்படிப்பு படிக்க முடிவு செய்துள்ளேன்.

எனது விடாமுயற்சியும், எனது குடும்பத்தாரின் அதீத ஒத்துழைப்புமே எனது வெற்றிக்கு காரணம் என்றும் ஜெ.காயத்ரி பேசினார்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments