உத்தரமேரூரில் விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்க நடவடிக்கை- இணைப்பதிவாளர்
காஞ்சிபுரம், அக்.27:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் நகர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உரம்,பூச்சி மருந்துகள் ஆகியன விற்பனை செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து இம்மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர் உத்தரமேரூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம்,பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதால் தனியாரிடம் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.
இப்புகாரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வந்திருந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதனையடுத்து வங்கிப்பணியாளர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சி மருந்துகள் அனைத்தும் உத்தரமேரூர் கூட்டுறவு கடன் சங்கத்திலேயே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தார்.இதனால் விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகளும் இணைப்பதிவாளருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.
No comments
Thank you for your comments