Breaking News

விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் நிலம் மீட்பு | Virudhachalam Viruthagireeswarar Temple Land Recovery by HRCE

விருத்தாச்சலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் இன்று மீட்கப்பட்டது.



சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும் 2590 சதுர அடி நிலத்தை, தனியார் நபர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலையில், இன்று (15.09.2025) கடலூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நிலம் திருக்கோயிலின் வசமாக சுவாதீனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் மாலா, மேலாளர் பார்த்தசாரதி, சிறப்பு பணி அலுவலர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் R.காமராஜ்

 ஒளிப்பதிவாளர் V.வேல்முருகன்






No comments

Thank you for your comments