Breaking News

விருத்தாசலத்தில் இடஒதுக்கீடு போராட்ட வீரர் மணி யாதவுக்கு வீரவணக்கம்

விருத்தாசலம், 17 செப்டம்பர் 2025 – 

1987-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான கடமலைபுத்தூர் மணி யாதவ் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, யாதவ மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாதவ மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் செங்கம் ராஜாராம் தலைமையில், சமூக நீதி போராளி மணி யாதவ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி செயலாளர் பிரசாத், பொருளாளர் எழிலரசன், விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் வீரப்பன், இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், இளைஞரணி செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய தலைவர் வாசு, தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த கிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் சேட்டு, காப்பலூர் சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பாலாஜி, ராணிப்பேட்டை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்




பேட்டி

செங்கம் ராஜாராம்
நிறுவனத் தலைவர், யாதவ மக்கள் இயக்கம்


📌 செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
📌 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545

No comments

Thank you for your comments