பலத்த மழையால் மின்கம்பியில் விழுந்த மரக்கிளை - உயிர்ச்சேதமின்றி செயல்பட்ட அரசுப் பணியாளர்கள்
காஞ்சிபுரம்,செப்.17:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரத்தில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ளது தும்பவனம் தெரு.இத்தெருவில் அதிகாலையில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளிக்காற்றால் மின்கம்பி மீது பெரிய மரக்கிளை ஒன்று விழுந்தது.மரக்கிளையை மின்சாரக் கம்பிகள் தாங்கி நின்றன.
அதன் பின்னர் மின்வாரிய ஊழியர்கள் துண்டித்த மின்சாரத்தை சரி செய்தனர்.
இதன் காரணமாக சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் தும்பவனம் தெரு,கீரை மண்டபம், ரங்கசாமி குளம், விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டது.
No comments
Thank you for your comments