Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்,செப்.21:

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் முஸ்லீம் இளைஞர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் முஸ்லீம் இளைஞர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் அக்கிளையின் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது.



கிளையின் செயலாளர் சாகுல்ஹமீது,பொருளாளர் பாசில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பேச்சாளர் அதீப் கலந்து கொண்டு கல்வியின் அவசியம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் நடத்தப்படும் நேர்காணல்களில் பங்கேற்கும் விதங்கள், உயர்கல்வியில் உள்ள பிரிவுகளும் அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் என்ற தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்தினார்.

கருத்தரங்கில் அமைப்பின் மாணவரணி சார்பில் சுபேதார், தொண்டரணி சார்பில் இர்ஷாத் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments