Breaking News

ஓரணியில் தமிழ்நாடு தீர்மான உறுதிமொழியில் வெறிச்சோடிய கூட்டம் .. காளி சேர் மத்தியில் உறுதிமொழி எடுத்த அமைச்சர் – பரபரப்பு!


 கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், “தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் – ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்” விருத்தாச்சலம் வானொலி திடலில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில், மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பத்மபிரியா கலந்து கொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தின் இறுதியில், அமைச்சர் சி.வெ.கணேசன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஆனால், பெரும்பாலான மக்கள் கூட்டம் கலைந்ததால், வெறிச்சோடி காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்

அதே சமயம், “அப்படி ஓரமா நிக்கிறவர்கள் எல்லாம் இங்கே காலி இருக்கைகளில் உட்காருங்க” என தானே மைக்கில் அறிவித்த காட்சி, வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை பார்த்த பொதுமக்கள், “அமைச்சரின் கூட்டம் மக்கள் வராமல் காலி நாற்காலிகள் மத்தியில் நடந்தது வெட்கக்கேடானது” என சிரிப்புடன் விமர்சித்தனர்.

🎥 ஒளிப்பதிவு: V.வேல்முருகன் – 8072117545
🖊️ செய்தி: R.காமராஜ் – 9080215691

No comments

Thank you for your comments