Breaking News

இராணிப்பேட்டையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்


 📍 இராணிப்பேட்டை :

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில், தூய்மை பாரதம் இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் “தூய்மையே சேவை 2025” விழிப்புணர்வு பேரணி இன்று கொடியசைத்து தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.

முக்கிய பங்கேற்பாளர்கள்

இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


No comments

Thank you for your comments