Breaking News

சென்னை உயர்நீதிமன்றத்தில் மோடி 75வது பிறந்தநாள் விழா – பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கொண்டாட்டம்

 சென்னை, 17 செப்டம்பர் 2025

பாஜக மாநில வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு, வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற விழாவில், பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமரகுரு, மாநில துணைத் தலைவர்கள் கரு நாகராஜன் மற்றும் பால்கனகராஜ், மூத்த வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இனிப்பு வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாவை சிறப்பித்தனர்.





No comments

Thank you for your comments