Breaking News

📌 காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா | Mallai Sathya New Movement Flag Launch Kanchipuram


 காஞ்சிபுரம், செப்.15:

மதிமுகவிலிருந்து வைகோவால் நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழா, இயக்க முன்னோடிகளுக்கு திராவிட ரத்னா விருதுகள் வழங்கும் விழா மற்றும் இயக்க கொடி அறிமுக விழா என முப்பெரும் நிகழ்வுகளாக நடைபெற்றது.


📍 காலை அமர்வுக்கு ராமேசுவரத்தை சேர்ந்த கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார்.


மாவட்ட செயலாளர்கள் ஊனை.பார்த் தீபன், சு.செல்வப்பாண்டியன், எஸ்.கௌரிகுமார், க.இளவழகன், ஜிஆர்பி ஞானம், க.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.வளையாபதி வரவேற்று பேசினார்.

மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் மதிமுக நிர்வாகிகள் பலரும் உரையாற்றினர்.




அரியலூர் மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம் இயக்கத்துக்கு நிதியுதவியாக ரூ.1.50 லட்சம் வழங்கினார்.

முன்னதாக, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மல்லை சத்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து ஊர்வலமாக கூட்டம் நடைபெற்றது.



வைகோவுக்கும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விருது தற்காலிகமாக மல்லை சத்யாவுக்கு வழங்கப்பட்டது.

விழாவில் இயக்கத்தின் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
🔴⚫ கருப்பு, சிவப்பு நிறங்களில் 7 நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இயக்க நிர்வாகிகளாக 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், வரும் நவம்பர் 20 ஆம் தேதி — நீதிக்கட்சி உருவான நாளன்று — அந்நாள் கூட்டத்தில் இயக்கம் கட்சியா அல்லது அமைப்பா என்பதும், அதன் பெயரும் நிர்வாகிகளின் பட்டியலும் அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தார்.

நிறைவாக, காஞ்சிபுரம் மாநகர செயலாளர் வி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments