காலாவதியான அரசு வாகனங்கள்..பாதுகாப்பற்ற அவலநிலை - காஞ்சிபுரம் ஓட்டுநர் சங்கம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
காஞ்சிபுரம்:
இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் முன்னிலையில், மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- அரசு வாகன மாற்றம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து, 100% தேய்மானம் அடைந்துள்ளன. இதனால் அதிகாரிகளும் ஓட்டுநர்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாகனங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பதவி உயர்வு கோரிக்கை:
அரசு ஓட்டுநர்கள் ஓய்வு பெறும் வரை ஓட்டுநராகவே பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பலர் பட்டதாரிகள் என்பதால், அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- காலிப் பணியிடங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனக் கூட்டத்தில் கோரப்பட்டது.
- பழைய ஓய்வூதிய திட்டம்:
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியது.
No comments
Thank you for your comments