Breaking News

காஞ்சிபுரத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆய்வு - மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகளை, பேரிடர் மேலாண்மை ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகள் குறித்து,  பேரிடர் மேலாண்மை ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு செ. வெங்கடேஷ் மற்றும் பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.




 

No comments

Thank you for your comments