Breaking News

முதலமைச்சர் கோப்பை,மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

காஞ்சிபுரம், செப்.13:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்க்கு பதக்தங்களும், சான்றிதழ்களும் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நிகழாண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் கடந்த 28.8.25 முதல் 10.9.2025 வரை நடைபெற்றது.

🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”

🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”

பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள்,மாற்றுத்திறனாளிகள்,அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகிய 5 பிரிவுகளில் 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்றது. 

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிப்பிரிவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா விளையைட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரிப்பிரிவை சேர்ந்த விளையாட்டுப் போட்டிகளில் மொ1த்தம் 7174 மாணவ,மாணவியர் பங்கு பெற்றிருந்தனர். இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கும் விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினார்.

எம்பி.க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி வரவேற்று பேசினார்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் விரைவில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் எனவும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Thank you for your comments