Breaking News

காஞ்சிபுரம் 18வது வட்டத்தில் 38 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு – அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்


 📅 14.09.2025 | காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வட்டத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நிறைவேற்றப்பட்டது.


நிகழ்ச்சி விவரம்

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் வி.எஸ். ராமகிருஷ்ணன் தனது சொந்த செலவில் 38 சிசிடிவி கேமராக்களை பொருத்தி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”

🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில், மாநகரக் கழகச் செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேமராக்களை துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கலந்து கொண்டோர்

மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.


No comments

Thank you for your comments