Breaking News

திமுக-விற்கு தாவிய இரண்டு கவுன்சிலர்கள்



காஞ்சிபுரம் மாநகராட்சியில் தற்போதைய கவுன்சிலர்களாக உள்ள 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி மற்றும் 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர், ஓபிஎஸ் அணியின் நிர்வாகியாக பணியாற்றி வந்த ஷாலினி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் தலைமையில் இந்த இணைவு நிகழ்ச்சி நடந்தது.

திமுகவின் வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்களிடம் கிடைக்கும் ஆதரவை முன்னிறுத்தி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர் தங்களை இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.



இந்நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் சி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

📌  Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!  

No comments

Thank you for your comments