Breaking News

கடலூர் மேற்கு மாவட்டத்தில் புதிய ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் நியமனம்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, 

கடலூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களின் பரிந்துரையின் பேரில், கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய கழக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



இதனை முன்னிட்டு, தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், அவரிடமிருந்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.


👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!

புதிய நிர்வாகிகள் பட்டியல்

அமைப்பாளர் : வேப்பூர் அரிஈசன்

துணை அமைப்பாளர்கள் :
  • சித்தூர் ஆசைத்தம்பி
  • சேப்பாக்கம் தனஞ்செழியன்
  • கோ.கொத்தனூர் சக்திவேல்
  • சாத்தியம் வெங்கடேசன்

இந்த நியமனம், கட்சியின் வளர்ச்சிக்கும், சமூக நலனுக்கும் சிறப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

Thank you for your comments