Breaking News

மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி-ஆட்சியர்-எஸ்பி. பார்வையிட்டனர்

காஞ்சிபுரம், செப்.5:

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எஸ்பி கே.சண்முகம் ஆகியோர் பார்வையிட்டனர்.



காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வடகிழக்குப் பருவமûழைய எதிர்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாதிரி ஒத்திகை பயிற்சி தீயணைப்புத்துறையினரால் நடத்தப்பட்டது.

இப்பயிற்சியின் போது வடகிழக்குப் பருவமழைக்காலங்களில் எவ்வாறு நம்மை தற்காத்துக்கொள்வது,வெள்ளம் வந்துவிட்டால் வீட்டில் உள்ள பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது போன்றவற்றை தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்கள்.




மாதிரி ஒத்திகைப் பயிற்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்பி கே.சண்முகம்,மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இவர்களுடன் காஞ்சிபுரம் மகரிஷி பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவியர்களும் தீயணைப்பு வீரர்களின் செயல்முறை விளக்கத்தைப் பார்வையிட்டனர்.

No comments

Thank you for your comments