Breaking News

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ எழிலரசன்


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 39,40வது வார்டு பகுதியில்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற  “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் பார்வையிட்டு, முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

பின்பு முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் இம்முகாமில் துறை சார்ந்த சான்றிதழ் உடனடியாக சரி பார்க்கப்பட்டு பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு, வருவாய் துறை சான்றிதழ்களை  வழங்கினார். 

தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள்   முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படுவதால் முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. 


இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.   

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்  மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன்,  வட்டாட்சியர் ரபிக், மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், 39வது வட்டக் கழக செயலாளர், மாநகராட்சி கவுன்சிலர் அன்பழகன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், 40வது மாநகராட்சி கவுன்சிலர் பானுப்ரியா சிலம்பரசன், வட்ட செயலாளர் சி. சரவணன்குமார் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments