மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு. பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்.
இந்த சிறப்பு வாய்ந்த முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த 400க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டது இதில் சொத்து வரி பெயர் மாற்றம், மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments