Breaking News

குப்பை மறுசுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கூட்டம்..!

கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கண்காட்சி கோவை மாநகராட்சி ஆர் எஸ் புரம் கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில் தனியார் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட மக்கும், குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை வைத்து பயோ கேஸ் மற்றும் உரம் தயாரித்தல் இயந்திரங்கள் கொண்ட ஸ்டால்களை பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்து கண்காட்சியினை பார்வையிட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”

🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”

இது குறித்து பேசுகையில் 

தமிழகத்தில் உள்ள தூய்மையான நகரங்களில் கோவை மாநகராட்சி முதற் இடத்தை பிடித்து முதல்வரிடம் பதக்கம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக பணியாற்றிய அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனைத் தொடர்ந்து 100 கிலோவிற்கு மேல் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், மற்றும் 5ஆயிரம் சதுரடிக்கு மேல் செயல்படும் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள் விடுதிகள், தொழில் நிறுவனங்கள் குப்பைகளை அவர்களே மக்கும்,மக்கா குப்பைகள் தனித்தனியாக பிரித்து அவற்றினை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது தனியார் நிறுவனங்களின் குப்பைகளை அகற்றும் நவீன இயந்திரங்களின் கண்காட்சியில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உணவு விடுதிகள் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments