Breaking News

நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்

காஞ்சிபுரம், செப்.10:

திரைப்பட நடிகை கௌதமி அவருக்கு சொந்தமான நில மோசடி வழக்கின் விசாரணைக்காக காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.

திரைப்பட நடிகை கௌதமியிடம் பல ஆண்டுகள் மேலாளராக பணிபுரிந்த அழகப்பன் என்பவர் கௌதமிக்கு திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக்கொண்டும், பணத்தை தரமாலும் இருந்து வந்தது தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். 

புகாரின் பேரில் அழகப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology

இவ்வழக்கில் அழகப்பனின் நண்பர்களான ரகுநாதன், பலராமன், சுகுமாறன் ஆகியோரும் இணைக்கப்பட்டு இது தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுகுமாறன் உயிரிழந்ததை தொடர்ந்து அவரை மட்டும் குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்குவதற்கான ஆட்சேபணை குறித்த விசாரணைக்கு கௌதமி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.




No comments

Thank you for your comments