Breaking News

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷ் மீண்டும் பணியில் சேர்ந்தார்

 காஞ்சிபுரம், செப்.10:

சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷ் புதன்கிழமை மீண்டும் தனது பொறுப்பில் சேர்ந்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் டிஎஸ்பி சங்கர்கணேஷுக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அவர் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்பி கே. சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிஎஸ்பி சங்கர்கணேஷுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்தது.

🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology

அதனைத் தொடர்ந்து, சங்கர்கணேஷ் புதன்கிழமை வழக்கம்போல் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்வதற்கு முன், அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


No comments

Thank you for your comments