Breaking News

காவல் நிலையத்தின் செயல்பாடுகள்,பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம், செப்.6:

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சனிக்கிழமை காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலையம் செயல்படும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது சிவகாஞ்சி காவல் நிலையம்.இக்காவல் நிலையத்தில் காவலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக பெரியகாஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முக்கிய எச்சரிக்கை : போலி ஈ-சலான் மோசடி! 

 காஞ்சிபுரம் சைபர் குற்றப்பிரிவு #awareness

காவல் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவையும்,பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர். சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார்,உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோர் காவல் நிலையம் செயல்படும் விதம்,இணையம் மூலமாக புகார் செய்யும் விதம், குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரை காவல் துறையினர் எவ்வாறு கண்காணிக்கிறார்கள்,சைபர் கிரைம் குற்றங்கள், சட்டம் ஒழுங்கை போலீஸ் அதிகாரிகள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.

காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் காவல்துறையினருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

No comments

Thank you for your comments