Breaking News

காஞ்சிபுரத்தில் 4997 பயனாளிகளுக்கு 254 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்


 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் 4997 பயனாளிகளுக்கு 254 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (09.09.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப. தலைமையேற்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. க. சுந்தர், திரு. சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் திருமதி எம். மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, 4997 பயனாளிகளுக்கு 254 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!

No comments

Thank you for your comments