Breaking News

வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ.20லட்சம் மதிப்பில் கடனுதவிகள், மேலாண்மை இயக்குநர் வழங்கினார்

காஞ்சிபுரம்,செப்.26:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.இக்கிளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் தலைமையில் நடைபெற்றது.

📌  Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!  

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் ஒருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடனுதவி,சிறுவணிகக்கடன், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் என மொத்தம் 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலரால் வழங்கப்பட்டது.கடனுதவிகள் வழங்கும் விழாவிற்கு மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் டி.சீனிவாசன்,உதவிப் பொதுமேலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வாலாஜாபாத் வங்கி கிளை மேலாளர் சேட்டு நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments