20 சிறந்த ஆசிரியர்களுக்கு Inspirational Guru Awards 2025 தேசிய விருது ...!
எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சார்பில் கோவையில் நடைபெற்ற டிரான்ஸ் பார்மிங் இந்தியா கான் கிளைவ் மாநாட்டின் நான்காவது பதிப்பில், இன்ஸ்பிரேஷனல் குரு அவார்ட்ஸ் 2025 விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், இளம் தலைமுறையினரை உருவாக்கத் தங்கள் வாழ் நாளையே அர்ப்பணித்த சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், வரவேற்புரையை வழங்கினார். அவர் தமது உரையில், எதிர்காலம் என்பது நாமும் காத்திருக்கும் ஒரு வானோட்டமல்ல அது நாமே சிந்தனை, கனவுகள், மேலும் முக்கியமாக நம் மனச்சாட்சியுடன் இணைந்து உருவாக்கும் உண்மை. நாளைய இந்தியா, ஏ ஐ மட்டுமல்ல, மனிதம் மட்டுமல்ல – இரண்டும் இணைந்து உருவாக்கும் பங்குதான். மனச்சாட்சி வழிகாட்ட, படைப்பாற்றல் வடிவமைத்து, கருணை நிலைநிறுத்தும் வகையில் அது கட்டியெழுப்பப்படும்."அதனைத் தொடர்ந்து முன்னாள் இந்திய பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ் பதுக்கோண், The Heart of a Champion: Human Lessons in an AI World” என்ற தலைப்பில் உரையாற்றி, “விளையாட்டில் மனித உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏஐ ஒருபோதும் மாற்ற முடியாது என்றார். அதேசமயம், பயிற்சி, செயல்திறன் பகுப்பாய்வு, ஊட்டச்சத்து போன்ற துறைகளில் அது முக்கிய பங்காற்றும் எனக் கூறினார்.”
ஃபுட் மார்க்கெட் பிளேஸ் ஸ்விக்கி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் கபூர்,CEO டெலிவரி டிலைட் ஏ ஐ லாஜிஸ்டிக் அண்ட் தி ஹுமன் எக்ஸ்பீரியன்ஸ் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் 2035க்குள் உணவு விநியோகத்தில் ட்ரோன் போன்ற புதுமைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தினார்.”
சுரேஷ் நாராயணன், முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நெஸ்லே இந்தியா – “From Instant Noodles to Instant Data: Building Brand Trust in the Digital Age” என்ற தலைப்பில் உரையாற்றி, “பிராண்டின் மதிப்பு வெறும் தயாரிப்போ அல்லது லோகோவோ அல்ல, மக்களின் மனதில் மகிழ்ச்சியான நீண்டநாள் அனுபவத்தை ஏற்படுத்து வதில்தான் உள்ளது என்றார்.”
சஞ்சய் ஜெயின், (Head of Google for Education, India) – “Learning Beyond Walls: Shaping Future Classrooms with AI” என்ற தலைப்பில் உரையாற்றி, “ஆசிரியர்களை AI ஒருபோதும் மாற்ற முடியாது, ஆனால் அது சிறந்த துணை ஆசானாகவும், தரவுத்தகவல் ஆதரவாகவும் இருந்து, மாணவர்கள் பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி கற்றுக்கொள்ள உதவும் எனக் குறிப்பிட்டார்.”இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 20 சிறந்த ஆசிரியர்கள் Inspirational Guru Awards 2025 தேசிய விருது பெற்றனர். மேலும், 14 ஆசிரியர்கள் SSVM Edition பிரிவில் கௌரவிக்க ப்பட்டனர்.2025 ஆம் ஆண்டின் தேசிய உத்வேக குரு விருது பெற்றவர்கள்:குன்னவாக்கம் விஞ்சமூர் ஹேமா – பத்மா சேஷாத்ரி பால பவன் மூத்த மேல் நிலைப் பள்ளி, சென்னை,இந்திரா பிரியதர்ஷினி சுப்ரமணியன் – அரசு ஆரம்பப் பள்ளி, புதுச்சேரி,ஸ்ரீ வி. சுப்ரமணியன் – கேந்திரிய வித்யாலயா CECRI வளாகம், காரைக்குடி,நிதி சவுத்ரி – ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் ஸ்கூல், குருகிராம்,ஜூலி ஸ்டெல்லா ஏ – சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,ஜானெட் சுகன்யா எஸ் – ராயல் கான்கார்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல், பெங்களூரு,ஜூஹி சிங் – போதி தாரு இன்டர் நேஷனல் ஸ்கூல், கிரேட்டர் நொய்டா,அனிதா சிங் யாதவ் – அரசு கூட்டு மூத்த மேல்நிலைப் பள்ளி, புது தில்லி,ஷிவானி மதன் – விப்ஜியோர் ஹை ஸ்கூல், குருகிராம்,அமித்தா கஹல்லோட் – ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் ஸ்கூல், குருகிராம்,ராஜலட்சுமி ஸ்ரீதர் – BVM குளோபல் பொல்லினேனி ஹில்சைடு மூத்த மேல்நிலைப் பள்ளி சென்னை கவிதா யாதவ் – ஸ்காட்டிஷ் ஹை இன்டர்நேஷனல் ஸ்கூல், குருகிராம்,கார்த்திகேயன் பி – அரசு மேல்நிலைப் பள்ளி, புஜங்கனூர், கோயம்புத்தூர்,ஷர்மிளா பேகம் ஏ – GGHSS பெரியம்பட்டி, தர்மபுரி,ராதா எல் – பஞ்சாயத்து ஒன்றிய ஆரம்பப் பள்ளி, மணவாளநகர், திருவள்ளூர்,ஷோபா மெஹ்ரோத்ரா – சன்பீம் ஸ்கூல் வருணா, வாரணாசி,சுபா ஆர் – சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்,குமரன் டி – ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்,வசந்தகுமார் கே – பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோயம்புத்தூர்,பூஜா ஷர்மா – ஸ்காட்டிஷ் ஹை இன்டர் நேஷனல் ஸ்கூல், குருகிராம்,SSVM பதிப்பு விருது பெற்றவர்கள்: சோபியா எச் – ஸ்ரீ சரஸ்வதி வித்யாஹ மந்தீர் ஸ்கூல், சாந்தினி பி – SSVM விதான் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜானா ஆர் – SSVM ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ், ரோஷினி பாலசுப்ரமணியன் – கிட்ஸ் காசா, ஜீன் பாட்ரிஷியா எஃப் – ரீட்ஸ் வேர்ல்ட் ஸ்கூல்,கியூரி பிரின்ஸ் – ரீட்ஸ் வேர்ல்ட் ஸ்கூல்,மரியா டெபெட்டா தாமஸ் – RUH – K-5 வளாகம்,வித்யா ஆனந்த் – SSVM கிட்ஸ் காசா,டாக்டர் வி. சரவணகுமார் – SSVM வேர்ல்ட் ஸ்கூல்,லட்சுமி – SSVM ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்,பூர்ணிமா ஜே – RUH ஆரம்ப ஆண்டுகள் மைதிலி வி – RUH கான்டின்யூம்,சந்தோஷ் மோகன் – RUH கான்டின்யூம் ப்ரீத்தி கே – RUH – K-5 வளாகம் AI & மனிதம் – நம் உலகை இணைந்து உருவாக்குவோம்” என்ற இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மனித மதிப்புகளுக்கும் இடையிலான சமநிலையின் அவசியத்தை வலியுறுத்தியது. முன்னோக்கிய பார்வையுடனான உரைகள், கலை நிகழ்ச்சிகள், உலகளாவிய பார்வைகள் மற்றும் Inspirational Guru Awards வழங்கலுடன், Transforming India Conclave 2025 மூன்றாம் நாள் சிறப்பாக நிறைவுற்றது.
No comments
Thank you for your comments