காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
காஞ்சிபுரம், ஆக.24:
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் செட்டில்மென்ட் நிலங்கள் அனாதீனம் என தவறான வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்ரபான கோப்புகளை மாவட்ட நிர்வாகம்நில நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நிலையிலும் உள்ளது.
இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க ஆய்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்செய்தி எங்கள் கிராமத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.வாழ்வாதாரமும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

No comments
Thank you for your comments